அப்பா போர் முனையில் .. பிள்ளைகள் தேர்வறையில்
கொழும்பு:
இலங்கையில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் குழந்தைகள் பரிட்சை எழுதினார்கள் என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
இலங்கையில் பிரபாகரன் தலைமையிலான விடுதலைப்புலிகள் தனி ஈழம் கேட்டு போராடி வருகிறார்கள். வவுனியா காட்டில் பிரபாகரன் முகாம்அமைத்து புலிகளை வழி நடத்திச் செல்கிறார்.
போராட்ட வாழ்வில் ஈடுபட்டிருக்கும் பிரபாகரனுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் இலங்கையில் உள்ள பள்ளியில் படித்துவருகின்றனர். இவர்கள் இருவரும் கடந்த ஆகஸ்ட் மாதம் பொதுத்தேர்வு எழுதி இருக்கிறார்கள். இலங்கை அரசு இதை உறுதிப்படுத்தியிருக்கிறது.
ஆனால் எந்தப் பள்ளியில் அவர்கள் படிக்கிறார்கள்? எங்கே பரிட்சை எழுதினார்கள் என்ற விவரம் வெளியிடப்படவில்லை. பள்ளியில் படிக்கும்குழந்தைகளை புலிகள் இயக்கத்தில் சேரும்படி விடுதலைப்புலிகள் கட்டாயப்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்து இருக்கிறது. இந்த நேரத்தில் பிரபாகரன்குழந்தைகள் படித்து வரும் தகவலை இலங்கை அரசு வெளியிட்டு இருக்கிறது.