வேட்பாளர் விண்ணப்ப விற்பனை .. சுதி குறைந்தது
சென்னை:
அ.தி.மு.க. சார்பில் தேர்தலில் போட்டியிட விண்ணப்பம் வாங்க வருவோர்எண்ணிக்கை குறைவான அளவிலேயே உள்ளது.
தமிழக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் போட்டியிடவிரும்பும் அதிமுகவினரிடமிருந்து அக்கட்சி விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது.
விண்ணப்ப விற்பனை திங்கள் கிழமை துவங்கியது. தமிழகத்தில் போட்டியிடவிரும்புவோர் ரூ 10 ஆயிரமும், பாண்டிச்சேரியில் போட்டியிட விரும்புவோர் ரூ 7ஆயிரமும் செலுத்தி விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளாலாம் என கட்சிதலைமையால் அறிவிக்கப்பட்டிருந்தது.
விண்ணப்ப விற்பனை தொடங்கிய முதல் நாள் ஏராளமானோர் ஜெயலலிதாபோட்டியிடக் கோரி மனுக்கள் தாக்கல் செய்தனர். விற்பனையின் இரண்டாவது நாள்அதிகமான பேர் விண்ணப்பம் வாங்க வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால்குறைந்த அளவில் மட்டுமே விண்ணப்பம் விற்பனை ஆகியது.
கவிஞர் கண்ணதாசனின் மகள் விசாலி கண்ணதாசன் வேலூர் தொகுதியில் சீட் கேட்டுமனு தாக்கல் செய்துள்ளார்
விண்ணப்ப விற்பனை மந்தமாக இருப்பது குறித்து கருத்துத் தெரிவித்த அதிமுகநிர்வாகிகள் சிலர், செவ்வாய்க்கிழமை என்பதால் மனு விற்பனை குறைவாக இருந்ததுஎன்றார்கள்.