For Daily Alerts
Just In
மீண்டும் அதிர்ந்தது பூஜ்
மும்பை:
குஜராத் மாநிலம் பூஜ் நகருக்கு அருகே மீண்டும் புதன்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. 4 ரிக்டர் அளவில் இதுஇருந்தது.
26-ம் தேதி பூஜ் நகரில் ஏற்பட்ட பூகம்பம் 1 லட்சம் பேர் வரை பலி கொண்டது. இன்னும் அந்த அதிர்ச்சி மறையாதநிலையில், அவ்வப்போது பூஜ் பகுதியில் லேசான நில அதிர்வு இருந்து வருகிறது.
இந்த நிலையில், புதன்கிழமை காலை 7.26 மணிக்கு மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மும்பையிலுள்ளபூகம்பவியல் கண்காணிப்பு நிலையத்தில் இது பதிவாகியுள்ளது. இந்த நில நடுக்கத்தின் மையம், பூஜ் நகருக்குஅருகே இருந்தது.
செவ்வாய்க்கிழமை மட்டும் ஐந்து முறை நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. 26-ம் தேதிக்குப் பிறகு இதுவரை மொத்தம்108 நில அதிர்வுகள் மும்பை நிலையத்தில் பதிவாகியுள்ளது.
யு.என்.ஐ.
Comments
Story first published: Wednesday, January 31, 2001, 5:30 [IST]