அழகிரியின் அமர்க்கள பிறந்த நாள்
மதுரை:
திமுகவிலிருந்து நீக்கப்பட்டாலும் கூட மு.க.அழகிரி தனது 50-வது பிறந்தநாளைவழக்கம் போல் கோலாகலமாக கொண்டாடினார்.
வீட்டிலிருந்து 25 கார்கள் புடைசூழ பிறந்த நாள் விழாவுக்கு ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த திருவாவடுதுறை ஆதின மடத்திற்கு அழகிரி சென்றார்.
பல ஊர்களிலிருந்தும் கார் மற்றும் வேன்களில் நூற்றுக்கணக்கான தொண்டர்கள்வந்திருந்து அவரை வாழ்த்தினர். அவரது காலில் விழுந்து பல தொண்டர்கள் வாழ்த்துபெற்றனர்.
தனது பிறந்த நாளை முன்னிட்டு அழகிரி 100 பெண்களுக்கு இலவசமாக குடம், 100ஆண், பெண்களுக்கு இலவசமாக வேட்டி, சேலை, 75 பெண்களுக்கு இலவச தையல்மிஷின், சலவை தொழிலாளர்கள் 25 பேருக்கு அயர்ன் பாக்ஸ், நான்கு சக்கர வண்டிஆகியவற்றை வழங்கினார்.
மதுரை நகர தி.மு.க. முன்னாள் செயலாளரான தாவூத்துக்கு ரூ 2 லட்சத்தை குடும்ப நலநிதியாக தனது சொந்த பணத்தில் இருந்து அழகிரி வழங்கினார்.
தனக்கு மாலைகள், பொன்னாடைகள் ஆகியவற்றை வழங்காமல் பணமாகவழங்குமாறு அழகிரி கேட்டுக் கொண்டதன்படி அவருக்கு தொண்டர்கள் பணமாகவழங்கினர். இதுபோல் சேர்ந்த ரூ 1 லட்சத்தை குஜராத் பூகம்ப நிவாரண நிதியாகமாவட்ட ஆட்சி தலைவரிடம் கொடுக்கவிருப்பதாக அழகிரி கூறினார்.
பிறந்தநாள் விழாவில் எம்.எல்.ஏ.க்கள், காவல்துறையினர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.












Click it and Unblock the Notifications