குஜராத்துக்கு உதவுங்கள் தமிழர்களே .. சரத்குமார்
சென்னை:
தமிழக மக்கள் குஜராத் பூகம்பத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தாராளமாக உதவ வேண்டும் என்று நடிகர் சரத் குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:
குஜராத் மக்களுக்கு உதவ வீடு வீடாகச் சென்று துணிமணிகளைச் சேகரிக்க வேண்டும். பூகம்பத்தால் லட்சக்கணக்கான குஜராத் மக்கள் மண்ணில்புதைந்து போன சம்பவம் அதிர்ச்சியடைய வைக்கிறது. அமைதி வழிப்பாதை தந்த காந்தி பிறந்த மண்ணில் தொடர்ந்து மரண ஓலம் கேட்டுக்கொண்டிருப்பது உலக மக்களையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இயற்கையின் சீற்றத்தைத் தாங்கிக் கொள்ளும் வலிமை மனிதனுக்கு இல்லையென்றாலும், பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட சக மனிதனுக்கு உதவும்நல்லெண்ணம் தமிழர்களுக்கு உண்டு.
உடைமைகளைப் பறிகொடுத்துத் தவிக்கும் மக்களுக்கு உடுக்க உடை அளிப்போம். அவர்களின் துன்பத்தைப் பகிர்ந்து கொள்வோம். நற்பணிமன்றத்தோழர்களே தோள் தட்டிப் புறப்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உபயோகப்படும் கம்பளி, ஜமுக்காளம், போர்வை ஆகியவற்றை அளியுங்கள்.
நகரங்களிலிருந்து கிராமங்கள் வரை வாழும் தோழர்கள் துணிமணிகளைச் சேகரித்து குஜராத் மக்களுக்கு அனுப்புங்கள். பாதிக்கப்பட்ட மக்களின்நலனுக்காகக் குரல் கொடுப்போம் என்று தனது அறிக்கையில் கூறியுள்ளார் சரத்குமார்.












Click it and Unblock the Notifications