வந்தது இத்தாலி உதவி
டெல்லி:
இத்தாலியிலிருந்து நிவாரணப் பொருட்களை ஏற்றிக் கொண்டு வந்த விமானம் புதன்கிழமை பிற்பகல் இத்தாலியிலிருந்து குஜராத் மாநிலம் பூஜ்ஜூக்குவந்தது.
நிவாரணப் பொருட்களுடன் வந்த விமானத்தில் ஜெனரேட்டர்கள், கூடாரம் அமைப்பதற்கான பொருட்கள், கம்பளிகள், சுத்திக்கரிக்கப்பட்ட நீர்ஆகியவை வந்தன. உலக உணவுத்திட்டத்தின் கீழ் வந்துள்ள இந்த பொருட்கள் பூஜ்ஜிலிருந்து 150 கிலோமீட்டர் தொலைவிலுள்ள ரபார் பகுதிக்கு அனுப்பிவைக்கப்படும். இத்தாலியிலிருந்து வந்துள்ள நிபுணர்கள் இந்தப் பொருட்களை ரபாருக்குக் கொண்டு செல்வார்கள்.
குஜராத் வந்துள்ள, இத்தாலிய வெளியுறவுத்துறை ஒருங்கிணைப்புப் பிரிவு துணை இயக்குநர் மாஸிமோ லூனாசி, குஜராத் கவர்னரை சந்தித்துப் பேசினார். அவர்நிவாரணப் பொருட்கள் வழங்கப்படுவதை மேற்பார்வையிட்டுவிட்டு வியாழக்கிழமை மீண்டும் இத்தாலி செல்வார்.
ஏற்கனவே இத்தாலியிலிருந்து குஜராத்துக்கு 28 லட்சம் டாலர்கள் அளிக்கப்பட்டது தவிர, குஜராத் பூகம்ப நிவாரணத்திற்காக இத்தாலியின் பல்வேறுஇடங்களில் நிதிவசூல் நடந்து வருகிறது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications