For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

160 பாக். மீனவர்கள் சாவு

By Staff
Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்:

இந்தியக் கடலில் மீன்பிடித்ததாகக் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த 160 பாகிஸ்தான் மீனவர்கள், குஜராத்தில் ஏற்பட்ட பூகம்பத்தில்பலியாகியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

இந்திய எல்லைப்பகுதியில் பாயும் அரபிக்கடலில் மீன்பிடித்தது தொடர்பாக கடந்த இரண்டு மாதங்களுக்குமுன் பாகிஸ்தான் மீனவர்கள் 160 பேர் குஜராத்மாநிலம் ஜாம்நகர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

குஜராத்தில் பூகம்பம் ஏற்பட்டதையடுத்து, ஜாம்நகரில் இருந்த சிறை இடிந்து தரைமட்டமானது. இந்தச் சிறையில் பாகிஸ்தான் மீனவர்கள் உள்பட 600பேர் அடைக்கப்பட்டிருந்தனர்.

பூகம்பம் குறித்துத் தெரிந்தவுடன், பாகிஸ்தான் மீனவர்களின் குடும்பத்தினர், சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்கள் குறித்தான தகவல்களையோ அல்லதுஇறந்து போன அவர்களது சடலங்களையோ தங்களுக்கு அனுப்பி வைக்குமாறு பாகிஸ்தான் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X