2 மீனவர்கள் சாவு .. ஜெ. பாய்ச்சல்
சென்னை:
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை வீரர்கள் துப்பாக்கி சூடு நடத்துவதைமத்திய, மாநில அரசுகள் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என ஜெயலலிதாகுற்றம் சாட்டியுள்ளார்.
இது பற்றி ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர்கூறியிருப்பதாவது:
29-ம் தேதி நாகப்பட்டினம் மாவட்டம் கிச்சாங்குப்பத்தைச் சேர்ந்த மீனவர்கள்கோடியக்கரையில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடல் படை வீர்கள்அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் இரண்டு பேர் இறந்து போனார்கள்.மேலும் 3 பேர் காயமடைந்தனர்.
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை வீரர்கள் தொடர்ந்து துப்பாக்கி சூடு நடத்திவருகிறார்கள். இதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் எந்த விதமான நடவடிக்கையும்எடுக்கவில்லை.
அக்கரைப்பேட்டை கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் 3 பேர் சென்ற ஜுன்மாதம் சுட்டுக்கொல்லப்பட்டனர், அவர்கள் குடும்பத்திற்கு இது வரை தமிழக அரசு எந்த விதமானஉதவித் தொகையும் வழங்கவில்லை, இது மிகவும் வேதனைக்குரிய விஷயம்.
இலங்கை கடற்படை வீரர்களின் துப்பாக்கி சூட்டை வன்மையாக கண்டிக்கிறேன்.இறந்து போனவர்கள் குடும்பத்திற்கு என் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் எனகூறியுள்ளார்.