காந்தி வீட்டில் பூகம்பம்
அகமதாபாத்:
குஜராத் மாநிலத்தில் ஏற்பட்ட பூகம்பம், தேசப் பிதா மகாத்மா காந்தி வீட்டையும் தாக்கியுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
மகாத்மா காந்தியின் வீடு குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ளது. கடந்த ஜனவரி 26 ம் தேதி குஜராத் மாநிலத்தில் ஏற்பட்ட பூகம்பம் பூஜ்மற்றும் அகமதாபாத் நகரங்களை பெரிய அளவில் பாதித்தது.
அகமதாபாத் நகரிலுள்ள மகாத்மா காந்தியின் வீட்டிலும் பூகம்பத்தால் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளன. ஆனால் வீடு முழுமையாகஇடிந்து விழவில்லை. வீட்டிலுள்ள பொருட்கள் எதுவும் சேதமடையவில்லை.
காந்தி பயன்படுத்திய பொருட்கள் அனைத்தும் எவ்வித சேதமும் இன்றி அப்படியே உள்ளன. காந்தி வீட்டில் பூகம்பத்தால் விரிசல்கள் ஏற்பட்டதையடுத்துஅவர் வீட்டுக்கு உள்ளே பார்வையாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. முன்னதாக குஜராத் மாநிலம் போர்பந்தர் என்ற இடத்தில் பிறந்த மகாத்மாகாந்தி நாளடைவில் அகமதாபாத் நகரில் குடியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications