பிஜியிலிருந்து உதவிக் கரம்
சுவா:
குஜராத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்விற்காக பிஜி தீவில் வாழும் குஜராத்தியர்கள் நிதி வசூல் செய்யும் முயற்சியில்இறங்கியுள்ளனர்.
பிஜித் தீவில் செயல்பட்டு வரும் பிஜி குஜராத் சமாஜ் அமைப்பு சார்பில் நிதிவசூல் செய்யப்பட்டு வருகிறது. பிஜித் தீவில் மொத்தம் 3, 80, 000 இந்தியர்கள்வசித்து வருகின்றனர். இவர்களில் 50,000 பேர் குஜராத்தைச் சேர்ந்தவர்கள்.
பிஜித் தீவில் வாழும் குஜராத் சமாஜ் மக்கள் வரும் பிப்ரவரி மாதம் 3 ம் தேதி கூடி, பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட குஜராத் மக்களுக்கு அடுத்தகட்டமாக என்ன செய்வது என்று ஆலோசனை செய்கிறார்கள். பிஜித் தீவில் குடியேறிய குஜராத் மக்கள், அந்த மாநிலத்திலுள்ள நவ்சாரி, சூரத்,சாவ்வாஸ்ட் நகரங்களிலிருந்து குடியேறியவர்கள். இந்த 3 இடங்களும் பூகம்பத்தால் மிகவும் சேதமடைந்துள்ளன.
குஜராத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலன்கள் ஏற்படும் வகையிலும், அமைதி ஏற்படும் வகையிலும் பிஜித் தீவில் உள்ள லட்சுமிநாராயணா கோவிலில் சாந்தி பிரார்த்தனைகள் தினமும் நடைபெறுகின்றன.
பிஜித் தீவில் பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் மகேந்திர செளத்ரி அரசில் செனட் உறுப்பினராகவும், இந்திய வர்த்தக கவுன்சில் தலைவராகவும்இருந்த தல்பாத் ரத்தோடு, பூகம்பம் ஏற்பட்ட போது, குஜராத் மாநிலம் நவ்சாரியில் இருந்தார். பூகம்பம் ஏற்பட்ட 3 நாட்களுக்குப் பிறகு அவர்தனது மனைவியிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தான் நன்றாக இருப்பதாகக் கூறினார்.
பிஜி இடைக்கால அரசு, குஜராத்தில் பூகம்பம் ஏற்பட்டதற்காக, தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பிஜித்தீவு செய்திதொடர்புத்துறை அமைச்சர் ராட்டு இனோகே க்யுபுபோலா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், குஜராத்தில் நடந்த சம்பவத்திற்கு பிஜித் தீவு இரங்கல்தெரிவிப்பதாக அறிவித்துள்ளார்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications