For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"நாங்கள் வளர்ந்து விட்டோமே ..

By Staff
Google Oneindia Tamil News

மயிலாடுதுறை:

வரவிருக்கும் தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் அதிக இடங்களைகேட்டு பெறுவோம் என தமிழக பா.ஜ.க. தலைவர் கிருபாநிதி தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க.வின் தமிழக தலைவர் கிருபாநிதி மயிலாடுதுறையிவ் நிருபர்களுக்கு அளித்தபேட்டியில் கூறுகையில், எங்கள் கட்சியில் தற்போது 11 லட்சம் உறுப்பினர்கள்உள்ளனர். கட்சி நன்கு வளர்ந்துள்ளது.

பொது மக்களிடம் தண்ணீர் பற்றாக்குறை பற்றிய குறையும், சிறு சிறு ஊர்களுக்குசரியான சாலை இல்லை என்ற குறையும் உள்ளது.

சில இடங்களில் கழிவுப் பொருட்களால் சுகாதார கேடு ஏற்படுவதையும் நாங்கள் ரதயாத்திரை சென்ற போது அறிந்து கொண்டோம்.ஏழை, எளிய மக்கள் சிலர் நிலப்பட்டாகேட்டனர்.

வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் 62 இடங்களை எங்களுக்கு வெற்றி வாய்ப்புஇருப்பதாக அடையாளம் கண்டிருக்கிறோம். எத்தனை இடங்களை கேட்போம்,பெறுவோம் என்பது பிறகுதான் தெரிய வரும்.

தி.மு.க.வுடன் எங்கள் கூட்டணி தொடரும். எங்கள் கட்சி வளர்ச்சி அடைந்துள்ளதால்கூடுதலான தொகுதிகளை எதிர்பார்க்கிறோம். கருணாநிதியும் கொடுப்பார் எனநம்புகிறோம்.

தமிழகத்தை பொறுத்த வரை தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவர்கருணாநிதிதான் தொகுதி பங்கீடு குறித்து அவர்தான் முடிவு செய்வார்.

நாங்கள் சாதிகளை ஆதரிக்கவில்லை. அவற்றை ஆதரிப்பவர்களும் விரைவில் திரும்பிவருவார்கள். தமிழகத்தில் சாதிக்கட்சிகள் அதிகமாகி வருகின்றன. இவற்றைவளரவிடக்கூடாது, சாதிக்கட்சிகளுடன் முதல்வர் கூட்டணி அமைக்க மாட்டார் எனநம்புகிறோம்,

சோ- ஜெயலலிதா சநத்திப்பு நட்பு முறையிலானது என சோ வே கூறியிருக்கிறார்.

பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட குஜராத்துக்கு டெல்லி, பம்பாய், கொல்கத்தாநகரங்களிலிருந்து தான் விமானம் நிவாரண பொருட்களை ஏற்றிச் சென்றுகொண்டிருந்தது. நாங்கள் கேட்டுக் கொண்ட பின்புதான் சென்னையிலிருந்தும்விமானம் செல்கிறது.

குஜராத் நிவாரணத்திற்காக மாவட்டம் தோறும் வசூல் செய்து வருகிறோம். வசூலாகும்தொகையை தலைமைக்கு அனுப்பி வைத்துள்ளோம் என்று கூறினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X