முன்னாள் அமைச்சரின் சொத்துக்கள் ஜப்தி செய்ய உத்தரவு
கோவை:
அ.தி.மு.க வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஈஸ்வரமூர்த்தியின் பினாமி சொத்துக்களைப் பறிமுதல் செய்யஈரோடு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த அசையா மற்றும் அசையா சொத்துக்களின் மதிப்பு 25 லட்சம் ஆகும்.
அ.தி.மு.க. ஆட்சியில் கதர் துறை அமைச்சராக இருந்தவர் ஈஸ்வரர்த்தி. இவர் தாராபுரம் தனித் தொகுதியிலிருந்துதேர்ந்தெடுக்கப்பட்டு எம்.எல்.ஏ. வாக இருந்தார்.
அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து, மனைவி, மற்றும் உறவினர்களின் பெயர்களில் இவர் சொத்துச் சேர்த்ததாகப்புகார்கள் எழுந்தது.
ஈரோடு, தாராபுரம், அம்மாபேட்டை, சின்னக்கலையம்புத்தூர், ஆகிய பகுதிகளில் அசையாச் சொத்துக்களை இவர்வாங்கிக் குவித்துள்ளார்.
இவை அனைத்தும் தந்தை பெருமாள், சகோதரி தமிழ்ச்செல்வி, அவரது கணவர் சதாசிவம், மனைவி சுஜாதாஆகியோரது பெயரில் இந்த சொத்துக்கள் இருந்துள்ளன.
இந்த சொத்துக்கள் அதிகாரத் துஷ்பிரயோகம் மூலம் சம்பாதித்தவை. எனவே இவற்றை ஜப்தி செய்ய வேண்டும்என ஈரோடு மாவட்ட ஊழல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் சுப்ரமணியம் மாவட்ட கூடுதல் தலைமை குற்றவியல்நீதிமன்றத்தில் புகார் செய்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி சீமதுரை, முதல் கட்டமாக முன்னாள்அமைச்சர் ஈஸ்வரமூர்த்தி, தனது உறவினர்கள்பெயரில் பினாமியாக வாங்கியுள்ள 25 லட்ச ரூபாய் மதிப்புள்ள நிலங்கள், மற்றும் 2 கார்கள், வீடுகள்ஆகியவற்றை ஜப்தி செய்ய உத்தரவிட்டார்.
ஜப்தி தொடர்பான வழக்கு விசாரணை இப்போது துவங்கியுள்ளது. இந்த விசாரணை தொடர்ந்து நடக்கும். இதன்முடிவில் ஈஸ்வரமூர்த்தி அதிகாரத் துஷ்பிரயோகம் செய்துள்ளாரா என்பது பற்றித் தெரிய வரும்.
அப்பீல் செய்வேன்: இந்நிலையில், வழக்கு முடிந்து தீர்ப்பு வெளியாகும் முன்பே சொத்துக்களை ஜப்தி செய்வதைஎதிர்த்து மேல் முறையீடு செய்வேன் என ஈஸ்வரமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், எனது தந்தை, மனைவி, சகோதரி ஆகியோர் வழக்குகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.இவர்கள் தங்களை வழக்கில் சேர்த்தது குறித்து தனித் தனியே முறையீடு செய்துள்ளனர்.
மேலும், வருமானத்துக்கு அதிகமாகச் சொத்துச் சேர்த்ததாக இறுதித் தீர்ப்பு வழங்கப்படவில்லை. அ.தி..கவிற்குஅவப் பெயரை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலும், எனக்கு சீட் கிடைக்கும் என்பதால் தி.மு.க இதனைச்செய்ய முனைந்துள்ளது. எனவே ஈரோடு மாவட்ட நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்வேன்என்றார்.












Click it and Unblock the Notifications