மீண்டும் சந்திப்போம்.. சட்டசபையில் முதல்வர்
சென்னை:
அ.தி.மு.க. உறுப்பினர் சட்டசபையில் இடைக்கால பட்ஜெட்டை கிழித்து குப்பைத்தொட்டியில் போட்டதற்கு முதல்வர் வெள்ளியன்று வருத்தம் தெரிவித்தார்.
பட்ஜெட் விவாதத்திற்கு பதிலளித்து பேசிய கருணாநிதி, தன் பெயரை கொண்டிருந்த பட்ஜெட்டை கிழித்துப் போட்டதை தான் பெரிதுபடுத்தவில்லை என்றும்அதில் தெய்வப்புலவர் திருவள்ளுவரின் திருக்குறள், மற்றும் மக்கள் தலைவர்களான அம்பேத்கர், காமராஜர், முகமது இஸ்மாயில் போன்றோர்களின்பெயர்களும் இடம்பெற்றிருந்ததால் அவ்வாறு செய்ததற்கு வருந்துவதாகக்கூறினார்.
பட்ஜெட்டில் ஒன்றுமில்லை என்பதற்காக எப்படி அவ்வாறு செய்யலாம் என்று கோபத்துடன் வினவிய கருணாநிதி பதிலுரையின் முடிவில் உறுப்பினர்கள்அனைவருக்கும் நன்றி தெரிவித்ததுடன் மீண்டும் சந்திப்போம் என்று கூறினார்.
அதன் பொருள் தேர்தலுக்குப்பின் சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு மீண்டும் சந்திப்போம் என்பதே என்று விளக்கம் அளித்தார்.
யு.என்.ஐ.