முஷாரப்பிற்கு நன்றி தெரிவிப்பார் வாஜ்பாய்
டெல்லி:
பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் பர்வீஸ் முஸாரப்பை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாகிஸ்தானின் குஜராத் பூகம்ப நிவாரண உதவிக்கு நன்றி தெரிவிக்கஇருப்பதாக பிரதமர் வாஜ்பாய் தெரிவித்தார்.
உருது மற்றும் ஹிந்தி மொழி சஞ்சிகையான "கயாதத்"தின் வெளியீட்டு விழாவில் பேசிய பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.
முன்னதாக இந்தியா பாகிஸ்தானின் உதவியை ஏற்க மறுத்துவிட்டது என்று முஸாரப் தெரிவித்தது குறித்துகூறியபோது பாகிஸ்தானின் உதவி தவறாக புரிந்து கொள்ள பட்டதன் விளைவே அவர் அவ்வாறு கருத்துதெரிவிக்க நேர்ந்தது என்ற வாஜ்பாயி பின்னர் பாகிஸ்தானின் உதவிப் பொருட்கள் அஹமதாபாத்தில்வந்திறங்கியது என்றார்.
முஸாரப்புடன் பேசுவது குறித்து கூறும் போது துயரங்கள் நிகழும்போது மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டால்அதன் பாரம் குறையும் என்றார்.
பாகிஸ்தானின் உதவிக்காக நன்றி தெரிவிக்கும் முகமாக மட்டுமே முஸாரப்புடன் பேச இருப்பதாக கூறிய பிரதமர்பயனுள்ள பேச்சுவார்த்தை நடத்துவதற்கு சாதகமான சூழ்நிலை நிலவும் போது பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தைதுவங்கும் என்றும் தெரிவித்தார். முன்னதாக, குஜராத் பூகம்பத்தின் போது உதவிய நாடுகள் அனைத்திற்கும்மீண்டும் நன்றி தெரிவித்தார் பிரதமர்.
1999ல் பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளராக முஸாரப் பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக இருவருக்கும்இடையே இப்பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications