நிவாரண நிதி கிரிக்கெட்
துபாய்:
ஷார்ஜா கிரிக்கெட் வீரர்களின் நல நிதிக்காக (சி.பி.எப்.எஸ்.) போட்டிகள் நடத்தும்குழு தற்போது குஜராத் பூகம்பத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் விதமாக மனிதநேய அடிப்படையில் மூன்று நாடுகள் கலந்து கொள்ளும் போட்டியை நடத்தவுள்ளது.
இந்தியா, பாகிஸ்தான், வங்க தேசம் கலந்து கொள்ளவிருக்கும் இந்த போட்டிக்கு 3நாடுகளும் சம்மதம் தர வேண்டும். போட்டி அமைப்பாளர்கள், 3 நாடுகளிடமிருந்தும்2 நாட்களுக்குள் பதிலை எதிர்பார்த்துள்ளனர்.
மனித நேய அடிப்படையில் இந்த போட்டிகள் நடத்தப்படுவதால் 3 நாடுகளும் இந்தபோட்டிகளுக்கு சம்மதம் அளிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
போட்டிகள் இந்த மாதம் 8-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.போட்டிகள் நடத்துவது குறித்த முடிவு லாகூரில் நடந்த ஆசிய கிரிக்கெட் கவுன்சில்கூட்டத்தில் எடுக்கப்பட்டது.
பாதக்கப்பட்டவர்களுக்கு உதவும் நல்லெண்ண அடிப்படையில் இந்த போட்டிகள்நடைபெற இருப்பதால் குறைந்த நேர அவகாசம் இருந்தாலும் போட்டியைவெற்றிகரமாக நடத்த சிபிஎப்எஸ் தலைவர் அப்துல் ரஹ்மான் புகாதிரும்ஒப்புக்கொண்டுள்ளதாக சிபிஎப்எஸ் அதிகாரிகள் நிருபர்களிடம் கூறினர்.
மூன்று நாடுகளும் மற்றொரு நாட்டுடன் ஒரு முறை விளையாடும். முண்ணனிவகிக்கும் இரு நாடுகள் இறுதிப்போட்டியில் பங்கு பெறும்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications