மும்பையை நோக்கி சர்வதேச போர்க் கப்பல்கள் ..
மும்பை:
இந்தியாவில் முதன்முறையாக சர்வதேச போர்க்கப்பல்களின் ஒத்திகை நடைபெற உள்ளது. பிப்ரவரி 17ம் தேதி முதல் மும்பையில் நடைபெற உள்ளஇந்நிகழ்ச்சியில் பங்கு பெறும் 86 போர்க்கப்பல்களில் 61 போர்க்கப்பல்கள் இந்தியாவைச் சேர்ந்தவை.
இந்தியக் குடியரசுத் தலைவர் பார்வையிடவுள்ள இந்நிகழ்ச்சியில் பங்கு பெறும் ஒரே விமானந்தாங்கிக் கப்பல் இந்தியாவின் ஐ.என்.எஸ்.விராட்.
கப்பற்படையின் மேற்கு பிராந்தியத்திலிருந்து கலந்து கொள்ளும் இந்தியக் கப்பல்களில் டெல்லி வகையைச் சேர்ந்த போர்க்கப்பல்களானஐ.என்.எஸ்.டெல்லி, ஐ.என்.எஸ். மைசூர், ஐ.என்.எஸ்.மும்பை ஆகியவை குறிப்பிடத்தக்கவை.
மேற்கு பிராந்தியக்கப்பல்களில் காஸின் வகையைச் சேர்ந்த ஐ.என்.எஸ்.ரண்வீர், புதிதாக சேர்க்கப்பட்ட ஐ.என்.எஸ்.பிரம்மபுத்திரா ஆகியன கலந்துகொள்கின்றன.
பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படும் ஐ.என்.எஸ்.கோமதி போன்றவற்றுடன், கப்பற்படையின் டேங்கர் கப்பலான ஐ.என்.எஸ்.ஜோதி, மற்றும் லியாண்டர்வகை போர்க்கப்பலான ஐ.என்.எஸ்.விந்தியாகிரி உள்ளிட்ட பல கப்பல்கள் கலந்து கொள்கின்றன.
ஏவுகணை தாங்கிச் செல்லும் ஐ.என்.எஸ். நிர்பிக், ஐ.என்.எஸ்.வீர் ஆகியவற்றுடன் கப்பற்படையின் சர்வேக் கப்பலான ஐ.என்.எஸ்.இன்வெஸ்டிகேட்டரும்கலந்து கொள்கின்றது.
ஐ.என்.எஸ்.ராணா உள்பட 11 கப்பல்கள் கிழக்குப்பிராந்தியத்தில் இருந்து கலந்து கொள்கின்றன.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications