அண்ணாவை நினைவு கூர்ந்த உடன்பிறப்புகள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திமுக நிறுவனருமான அண்ணா என்று அழைக்கப்படும்சி.என்.அண்ணாத்துரையின் 32-வது நினைவுதினம் சனிக்கிழமை தமிழகம் முழுவதிலும் அனுசரிக்கப்பட்டது.
முதல்வர் கருணாநிதியும், அமைச்சர்களும் சென்னையில் ஊர்வலமாக சென்று மெரீனா கடற்கரையில் அமைந்துள்ளஅண்ணா சமாதியில் அஞ்சலி செலுத்தினர்.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலிலா மற்றும் பல்வேறு திராவிடக் கட்சிகளின் தலைவர்களும் அண்ணாசமாதியில் அஞ்சலி செலுத்தினர்.
திருச்சியில், திமுக, மதிமுக, எம்.ஜி.ஆர்.கழகம், அதிமுக, எம்.ஜி.ஆர்.அதிமுக ஆகிய கட்சிகளின் தலைவர்கள்மறைந்த தலைவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
திருச்சி மாவட்டத்தில், அண்ணா நினைவு நாளையொட்டி, பல்வேறு கோவில்களில் சமபந்தி போஜனமும் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications