குஜராத் .. நிதி வசூலிக்கிறது ராஜ் டி.வி.
சென்னை:
குஜராத் பூகம்ப நிவாரண நிதி திரட்டுவதற்காக சென்னை மெரினா கடற்கரையில் குஜராத்ரி என்ற பெயரில் இசைவிருந்து ஒன்றிற்கு தனியார்தொலைக்காட்சி நிறுவனமான ராஜ் டி.வி. ஏற்பாடு செய்துள்ளது.
காதலர் தினமான பிப்ரவரி 14ம் தேதி நடைபெறவுள்ள இந்நிகழ்ச்சியில் சாதகப்பறவைகள் குழுவினரின் இசைநிகழ்ச்சி நடைபெறும்.
தேசிய ஒற்றுமையை வலியுறுத்தும் இந்நிகழ்ச்சிக்கு குஜராத்ரி என்று பெயரிடப்பட்டுள்ளதோடு அனுமதியும் இலவசம்.
இந்நிகழ்ச்சிக்காக வைரமுத்து எழுதியுள்ள குஜராத்தை பற்றிய பாடல்களும் நிகழ்ச்சியின் இடையிடையே இடம்பெறவிருக்கிறது.
நிகழ்ச்சிக்கு வரும் மக்கள் அங்கு வைக்கப்பட்டுள்ள மெகா உண்டியல்களில் தங்கள் பங்களிப்பைச் செலுத்தலாம். மேலும், பிப்ரவரி 11முதல் 13வரை நகர்முழுவதும் தகுந்த பாதுகாப்புடன் 30 உண்டியல்கள் வலம் வரும். குஜராத் நிவாரண நிதிக்கு மக்கள் தாராளமாக நிதி வழங்க வேண்டும் என்று ராஜ்டி.வி.யின் நிர்வாக இயக்குனர் ராஜேந்திரன் தெரிவித்தார்.
ஒரு கோடி ரூபாய் வரை இந்நிகழ்ச்சியின் மூலம் வசூலாகும் என்று எதிர்பார்ப்பதாக ராஜ் டி.வி. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிகழ்ச்சி முழுவதும்ராஜ் டி.வி.யில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
யு.என்.ஐ.