மீனவர் கோவில் 5-ம் தேதி கும்பாபிஷேகம்
ராமேஸ்வரம்:
ராமேஸ்வரத்தில் மீனவ சமுதாயத்திற்குச் சொந்தமான கோவிலில் பிப்ரவரி 5-ம் தேதி கும்பாபிஷேகம்நடைபெறவுள்ளது.
ராமேஸ்வரம் ஸ்ரீரங்கநாதசுவாமி கோவில் கும்பாபிஷேகம் நடைபெறும் அதே தினத்தில் இந்தக் கோவிலிலும்கும்பாபிஷேகம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. இந்த கும்பாபிஷேகத்தை காஞ்சி காமகோடி பீடாதிபதிஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் நடத்தி வைக்கிறார்.
மீனவர் சமுதாயத்திற்குச் சொந்தமான இந்தக் கோவில் தங்கச்சி மடம் பகுதியில் உள்ளது. இந்தக் கோவிலுக்குவெள்ளிக்கிழமை வருகை தந்த ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கும்பாபிஷேகத்திற்குத் தேவையான நிதியைநன்கொடையாக வழங்கினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ராமநாதசுவாமி கோவில் கும்பாபிஷேகம் முடிந்த பின்னர்தங்கச்சிமடத்திற்குச் சென்று அங்குள்ள மீனவர் கோவிலில் கும்பாபிஷேகத்தை நடத்தி வைப்பேன் என்றார்.
இந்தக் கோவிலுக்குத் தேவையான நிலத்தை மேல் கரட்டயூர் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் அன்பளிப்பாகஅளித்துள்ளனர். இங்கு காஞ்சி மடம் சார்பில் பள்ளி கட்டப்படவுள்ளது. அடுத்த கல்வியாண்டு முதல் மீனவக்குழந்தைகளுக்கு இங்கு கல்வி போதனை நடக்கும்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications