நெற்றியிலிருந்து மூக்கு வருமா?

Subscribe to Oneindia Tamil

கோவை:

குடிபோதையில் நண்பனின் மூக்கைக் கடித்துத் துப்பினார் ஒருவர். மூக்கு அறுபட்டவருக்கு மீண்டும் கோவை அரசுமறுத்துவமனையில் பொறுத்தப்பட்டு சாதனை செய்யப்பட்டுள்ளது.

தாராபுரம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கராஜ் (30). இவரும் இவரது நண்பரும் கடந்த நான்குமாதங்களுக்கு முன்பு குடிபோதையில் இருந்தனர். அப்போது அவரது நண்பர் தங்கராஜின் மூக்கை கடித்துத்துப்பினார்.

மூக்கை இழந்து, காயத்துடன் வலம் வந்தார் தங்கராஜ். ஊரில் உள்ளவர்கள் அவரை கேலி செய்ததால், மனம்நொந்தார். இதையடுத்து கோவை அரசு மருத்துவமனைக்கு வந்தார். அங்கு நடந்த விபரத்தை டாக்டர்களிடம்கூறினார்.

எனக்கு ஏதாவது உதவி செய்யுங்கள் என அழாக் குறையாக வேண்டிய தங்கராஜுக்கு எப்படி சிகிச்சை தருவதுஎன்று டாக்டர் விஜயகுமார் என யோசனை செய்தார். பின்னர் அவரது நெற்றியில் இருந்து கொஞ்சம் சதையைஎடுத்து மூக்காக மாற்றி ஒட்டினார். இப்போது மூக்கு முளைத்தது.

இந்த மூக்கு குறித்து டாக்டர் விஜயகுமார் கூறுகையில், இந்தியாவில் பிளாஸ்டிக் சர்ஜரி என்பது இப்போது மட்டும்இல்லை. பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே இருந்துள்ளது. இந்த சர்ஜரிதான் வெளிநாடுகளுக்குசென்று பிரபலமடைந்துள்ளது.

முகம் கோணலாக இருந்தால் கூட அதனை நேராக மாற்றி விட முடியும். மரு வளர்ந்து கண்ணை மூடிய ஒருபெண்ணுக்கு இது போன்ற அறுவை சிகிச்சை செய்து சரி செய்துள்ளோம்.

நண்பன் மூக்கை கடித்து விட்டான் எனக் கேள்விப்பட்டபோது எனக்கும் ஆச்சரியமாகத் தான் இருந்தது. இன்னும்நமது பழங்கால மருத்துவங்களில் கூறப்பட்டுள்ள அறுவை சிகிச்சைகளை ஆராய்ந்தால், எந்த நோயையும் எளிதில்தீர்க்க முடியும் என்றார் அவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+