போலி நகையை அடகு வைத்த தம்பதிகள்
Subscribe to Oneindia Tamil
புதுவை:
போலி நகையை அடகு வைத்து பணம் பெற்ற தம்பதியினர் கைது செய்யப்பட்டனர்.
புதுவை முத்தியால்பேட்டையைச் சேர்ந்த ராஜன் மற்றும் அவரின் மனைவி தீனா இருவரும் சேர்ந்து 11 வளையல்கள் மற்றும் 3 மோதிரங்களை தங்கம்எனக்கூறி அப்பகுதியைச் சேர்ந்த ஜெயலட்சுமி அம்மாளிடம் கொடுத்து 20,000 ரூபாய் பணம் பெற்றுள்ளனர்.
பத்து மாதம் கடந்தும் நகை மீட்கப்படாததால் அவற்றை சோதித்து பார்த்தபோது அவை போலி எனத் தெரியவந்தது. இதுபற்றி கொடுத்த புகாரின்பேரில் போலீசார் அத் தம்பதியரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications