பெங்களூரிலிருந்து டாக்டர்கள் ..
பெங்களூர்:
குஜராத் மாநிலத்தில் பூகம்பத்தால் காயமடைந்த மக்களுக்கு மன அழுத்தம் மற்றும் மன நெருக்கடி ஏற்படாதவாறுபாதுகாக்க பெங்களூர் நிம்மான்ஸ் மருத்துவமனையிலிருந்து டாக்டர்கள் குழு இந்த வார இறுதியில் குஜராத்செல்கிறது.
ஒரிசாவில் 1999 ம் ஆண்டு புயல் ஏற்பட்ட போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனநோய் ஏற்பட்டது. மனநோயால்பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் பல மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அப்போதுநிம்மான்ஸ் மருத்துவமனை டாக்டர்களும் பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று உதவி புரிந்து வந்தார்கள் என்பதுகுறிப்பிடத்தக்கது.
குஜராத் மாநிலத்தில் ஜனவரி 26 ம் தேதி ஏற்பட்ட பூகம்பம் பெருமளவு உயர்ச்சேதத்தையும், பொருட்சேதத்தையும்ஏற்படுத்தியது. பூகம்பத்தில் காயமடைந்த 50,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நிம்மான்ஸ் மருத்துவமனை தலைமை டாக்டர் ஐசக் தலைமையில் டாக்டர்கள் குழு இந்த வார இறுதியில் குஜராத்செல்கிறது. அவர்கள் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மன அழுத்தம், மனச்சோர்வு, மன நெருக்கடிஆகியவை ஏற்படாமல் சிகிச்சை அளிப்பார்கள்.
அவர்களுக்கு இயற்கையின் சீற்றம், அதனால் ஏற்பட்ட பாதிப்புக்கள், இழப்புக்கள், அரவணைப்பு, ஆதரவு என்றுபலவகைகளில் பெங்களூரிலிருந்து செல்லும் டாக்டர்கள் ஆலோசனை கூறுவார்கள்.
ஐ.ஏ.என்.எஸ்.