For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சிறுத்தைகள் தாக்கி 7 குதிரைகள் சாவு

By Staff
Google Oneindia Tamil News

பழனி:

கொடைக்கானல் மலைப் பகுதியில் சிறுத்தைகள் தாக்கி 7 குதிரைகள் இறந்து போனது. இதையடுத்து அப்பகுதிவிவசாயிகள் மிகவும் கவலை அடைந்துள்ளனர்.

கொடைக்கானல் மலைப் பகுதிகளில் சுமை ஏற்றிச் செல்ல குதிரைகளை விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர்.கடந்த சில நாட்களாக கொடைக்கானல் மலைப் பகுதிகளில் சிறுத்தைப் புலிகள் நடமாட்டம் இருந்து வருகிறது.இதனால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

ஒரு மாத காலத்திற்கு முன்பு சிறுமலையிலிருந்த சிறுத்தை ஒன்று திண்டுக்கல் நகருக்குள் புகுந்து அட்டகாசம்செய்தது. இந்த சிறுத்தைப் புலியை அவர்கள் அடித்துக் கொன்றனர்.

இதையடுத்து தற்போது விவசாயிகளுக்குச் சொந்தமான ஏழு குதிரைகளை, சிறுத்தைப் புலிகள் அடித்துக்கொன்றுள்ளன. கொடைக்கானல் மலை அடிவாரங்களில் இந்த சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதனால்அப்பகுதி விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X