தேர்வுகள் ஒத்திவைப்பு?
அகமதாபாத்:
பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட குஜராத்தில் மார்ச் 19 ல் ஆரம்பிக்கப்பட இருந்த பள்ளி இறுதித் தேர்வுகள் தள்ளி வைக்கப்படுவது பற்றிய அறிவிப்புதிங்களன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது மாநிலம் முழுவதிலும் உள்ள கல்வி நிலையங்கள் அனைத்திற்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆரம்பப்பள்ளிகள் வரும் 26ம் தேதிதிறக்கப்படும் என்றும், மற்ற வகுப்புகள் மற்றும் கல்லூரிகள் வரும் 14 ம் தேதி திறக்கப்படும் என்றும் மாநில கல்வித்துறை வட்டாரங்கள்தெரிவிக்கின்றன.
மாநில அரசின் நிவாரண நடவடிக்கை மந்தமாக இருப்பதால் சுப்ரீம் கோர்ட் நீதிபதி தலைமையில் நிவாரணப்பணி நடைபெற வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ்.தலைவர் சேஷாத்திரி கோரியுள்ளார்.
விஸ்வ ஹிந்து பரிஷத்தின் அசோக் சிங்கால் உள்பட பலரும் நிவாரண நடவடிக்கைகள் மற்றும் நிவாரண நிதி குறித்த தகவல்கள் அனைத்தும் வெளிப்படையாகமக்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும் என்று கோருகின்றனர். ஆளுங் கட்சியின் ஆதரவு அமைப்புகளே இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளதுகுறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications