கைகொடுக்கிறார் சோனியா
டெல்லி:
பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட குஜராத் மக்களுக்காக 150 லாரிகளில் நிவாரணப் பொருட்களை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திஞாயிற்றுக்கிழமை அனுப்பி வைத்துள்ளார்.
குஜராத் மாநிலம் கட்ச், ராஜ்கோட், அகமதாபாத், சுரேந்திரநகர் மற்றும் சூரத் உள்பட 17 மாவட்டங்களில் ஜனவரி 26 ம் தேதி பூகம்பம்ஏற்பட்டது. இதில் பலர் உயிரிழந்தனர். பலர் வீடுகளையும், உடைமைகளையும் இழந்து தன்னந்தனி ஆளாகி விட்டனர்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாடு முழுவதும் பல்வேறு அமைப்புக்கள் உதவிக்கரம் நீட்டியுள்ளன. அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இளைஞர் காங்கிரஸ்பிரிவினர் பல்வேறு மாநிலங்களிலும் நிவாரணப் பொருட்களை சேகரித்து, டெல்லியில் உள்ள தலைமையகத்துக்கு அனுப்பி வைத்தனர்.
உணவுப்பொருட்கள், துணிமணிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வந்து குவிந்தன. இந்த நிவாரணப் பொருட்கள் 150 லாரிகளில் ஏற்றப்பட்டுடெல்லியிலிருந்து குஜராத் மாநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
அந்த லாரிகளை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வழியனுப்பி வைத்தார். அவை குஜராத் மாநிலத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்டவீடுகளை இழந்து தவிக்கும் மக்களுக்கு விநியோகிக்கப்படும்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications