அழிந்த காதல் சின்னம்
மார்பி:
குஜராத்தில் ஏற்பட்ட பூகம்பத்தில் புகழ் பெற்ற பழமையான காதல் சின்னமும் அழிந்து போய்விட்டது.
குஜராத்தின் ராஜ்கோட் பகுதியில் மார்பியில் 80 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மணி மந்திர் என்ற அழகியகட்டிட வேலைப்பாடுகள் கொண்ட சிவப்பு நிற சுற்றுச்சுவர்கள் அமைக்கப்பட்ட கண்கவர் கட்டிடம் உள்ளது.
இது தாக்கேர் சாஹேப் சர் வாக்ஜி தன் காதலி மணியின் நினைவாக எழுப்பிய காதல் நினைவுச் சின்னம் இந்தகட்டிடம். வாக்ஜியால் மணியை மணக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் உள் பகுதியில் அழகாக அமைந்துள்ள ராதா- கிருஷ்ணன் கோவிலில் இருந்து பார்த்தால் மேக்ஹூ நதியின்அழகான காட்சியைக் காணலாம். இந்த நினைவுச் சின்னம் செவ்வக வடிவில் அமைந்துள்ளது. இங்கு 2 மாடிகளும்,130 அறைகளும் உள்ளன. இந்த நினைவுச் சின்னத்தை 1922-ம் ஆண்டு ரூ 30 லட்சம் செலவில் வாக்ஜி கட்டினார்.அந்த ஆண்டே அவரும் இறந்து விட்டார்.
1979-ம் ஆண்டு மேக்ஹூ அணையில் உடைப்பு ஏற்பட்டதால் வந்த வெள்ளத்தில் கூட இந்த காதல்நினைவுச்சின்னம் சேதமடையாமல் இருந்தது. ஆனால் சென்ற மாதம் 26-ம் தேதி ஏற்பட்ட கடும் பூகம்பத்தில் கடும்சேதம் ஏற்பட்டது. பல கட்டிடங்களும் தரை மட்டமாகின. இந்த காதல் சின்னத்தையும் அந்த பூகம்பம் விட்டுவைக்கவில்லை. இந்த காதல் சின்னமும் முற்றிலும் சீர்குலைந்து போனது.












Click it and Unblock the Notifications