முதல்வர் பதவியிலிருந்து ஓய்வு பெறுகிறார் ஜோதிபாசு

Subscribe to Oneindia Tamil

கல்கத்தா:

23 ஆண்டுகளாக மேற்கு வங்க மாநில முதல்வராக இருந்து வந்தமார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் முதல்வர் ஜோதி பாசு நவம்பர் முதல் வாரத்தில் முதல்வர்பதவியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

உடல் நலத்தைக் கருத்தில் கொண்டு முதல்வர் பதவியிலிருந்து, ஓய்வு பெறுவதாகஅவர் கூறியுள்ளார். கல்கத்தாவில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர்பேசுகையில், துணை முதல்வர் புத்ததேவ் பாட்டசார்ஜி அடுத்த முதல்வராகபதவியேற்பார்.

கல்கத்தாவில் சனிக்கிழமை நடைபெறவுள்ள இடதுசாரிக் கூட்டணியின் கூட்டத்தில்எனது ஓய்வு குறித்து விவாதிக்கப்படும். அதன் பிறகு அதிகாரப்பூர்வமாகஅறிவிக்கப்படும்.

புதிய முதல்வர் மேற்கு வங்கத்திற்குக் கிடைப்பார். நவம்பர் முதல் வாரத்தில் அவர்பதவியேற்பார். எனக்கும், மாநிலஅரசுக்கும் நலன் பயக்கக் கூடியது இந்த முடிவு.

முதல்வராக நான் இல்லாமல் போனாலும் கூட கட்சியிலிருந்து நான் விலக மாட்டேன்.எனது இறுதி மூச்சு வரை கம்யூனிஸ்டாகவே இருப்பேன் என்றார் பாசு.

ஜோதிபாசு 1977-ம் ஆண்டு ஜூன் 20-ம் தேதி மேற்கு வங்க மாநில முதல்வராகப்பொறுப்பேற்றார். 1946-ம் ஆண்டிலிருந்து அவர் தேர்தலில் போட்டியிட்டு வருகிறார்.1972-ம் ஆண்டு தவிர பிற தேர்தல்கள் அனைத்திலும் அவர் வெற்றி பெற்று சாதனைபடைத்துள்ளார். தொடர்ந்து 23 ஆண்டுகள் மேற்கு வங்க மாநில முதல்வராக அவர்இருந்ததும் கூட ஒரு சாதனை ஆகும்.

கவர்னரின் ஆலோசனைப்படி புதிய முதல்வர் பதவியேற்பதற்கான தேதியை இறுதிசெய்யும்படி மாநில தலைமைச் செயலாளரை, ஜோதிபாசு கேட்டுக் கொண்டுள்ளார்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+