ஷார்ஜாவில் இந்தியா விளையாடாது .. அதிகாரபூர்வமாக அறிவிப்பு
டெல்லி:
குஜராத் நிவாரண நிதிக்காக ஷார்ஜாவில் நடை பெற இருந்த மூன்று நாடுகள் கிரிக்கெட்போட்டியில் இந்திய அணி பங்கு பெற அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் எல்லை கடந்த வன்முறையில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால்பாகிஸ்தானுடன் எந்த விளையாட்டு போட்டியிலும் இந்தியா விளையாடாது எனஇந்திய அரசு முடிவு செய்தது. இதன் படி இந்திய அணி பாகிஸ்தானில்மேற்கொள்ளவிருந்த சுற்றுப்பயணமும் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் குஜராத் பூகம்பத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டும் விதமாகஷார்ஜாவில் இந்தியா, பாகிஸ்தான், வங்க தேசம் ஆகிய 3 நாடுகள் பங்கு பெறும்கிரிக்கெட் போட்டியை ஷார்ஜாவில் நடத்த ஆசிய கிரிக்கெட் அமைப்பு ஏற்பாடுசெய்தது
இந்த போட்டியை கிரிக்கெட் வீரர்கள் நலநிதிக்காக போட்டிகள் நடத்தும் அமைப்புநடத்துவதாக இருந்தது.
இந்த போட்டியில் இந்தியா பங்கேற்காது என விளையாட்டுதுறை அமைச்சர் உமாபாரதி தெரிவித்திருந்தார். தற்போது ஷார்ஜா போட்டியில் இந்தியா கலந்து கொள்ளாதுஎன வெளியுறவுத்துறை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்புதிங்கள்கிழமை வெளியிடப்பட்டது.