மேட்ச் பிக்சிங் சட்டமாக்கப்பட வேண்டும் .. ஜாகீர் அபாஸ்
துபாய்:
கிரிக்கெட் மேட்ச் பிக்சிங் சட்டமாக்கப்பட வேண்டும் என பாகிஸ்தானின் முன்னாள்கிரிக்கெட் வீரர் ஜாகீர் அபாஸ் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:
மேட்ச் பிக்சிங் என்பது சட்டத்திற்கு புறம்பானது என்றாலும் பெட்டிங் பல நாடுகளிலும்சட்டமாக்கப்பட்டுள்ளது. அது ஆசியாவிலும் சட்டமாக்கப்பட வேண்டும். மேட்ச்பிக்சிங்கில் வீரர்கள் ஈடுபடுவது தலைகுனிவை ஏற்படுத்தக்கூடியது.
இந்தியா- பாகிஸ்தான் இரு நாடுகளும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவேண்டும். அதிகாரிகள் அரசியலையும், விளையாட்டையும் சம்பந்தப்படுத்தக்கூடாது.இந்தியாவிலோ,ஷார்ஜாவிலோ, பாகிஸ்தானிலோ அல்லது எங்கு போட்டிகள்நடந்தாலும் இரு நாடுகளும் பங்கேற்று விளையாட வேண்டும்.
மாட்ச் பிக்சிங்கில் ஈடுபட்ட பாகிஸ்தான் வீரர்களுக்கான அபாராதத்தொகையைஅவர்களுக்கு போட்டியில் விளையாடியதற்காக கொடுக்கப்படும் சம்பளத்திலிருந்துஎடுத்துக் கொள்வது என பாகிஸ்தான் கிரிக்கெட் காட்டுபாட்டு வாரியம் எடுத்த முடிவுசரியானதுதான்.
வாசிம் அக்ரமை பாகிஸ்தான் அணிககு கேப்டனாக நியமிப்பது இல்லை எனகிரிக்கெட் கட்டுபாட்டு வாரியம் முடிவு செய்துள்ளது. தற்போதைய நிலையில்பாகிஸ்தான் அணிக்கு கேப்டனாக வாசிக் அக்ரம்தான் சிறந்தவர். வாசிம் அக்ரமைவிட வேறு யாரும் சிறந்த தலைவராக இருக்க முடியாது என்றார் அவர்.
யு.என்.ஐ.