பா.ம.க. .. தலைவர்கள் என்ன சொல்கிறார்கள்?
சென்னை:
கூட்டணியிலிருந்து கட்சிகளை விலக்க பா.ஜ.க முயற்சிக்காது, மாறாக இணைத்துக் கொள்ளவே விரும்பும் என்று பா.ஜ.க.வின் இல.கணேசன் தெரிவித்தார்.
பாட்டாளி மக்கள் கட்சி, தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகியது குறித்து பல்வேறு கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ம.தி.மு.க.வின் வைகோ தெரிவித்ததாவது,ராமதாஸ் கூட்டணியில் இருந்து விலகுவது பற்றி தெரிவித்தபின் கருத்து தெரிவிக்கிறேன் என்றார்.
பா.ஜ,க.வின் இல.கணேசன் கூறியபோது பா.ம.க.விற்காக த.ரா.கவை கூட்டணியில் இருந்து விலக்க முடியாது. எனினும், பா.ம.க.விலகல் பற்றிவாஜ்பாய் தான் முடிவு செய்ய வேண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி தலைமை எடுக்கும் முடிவை ஏற்றுக்கொள்வோம் என்றார்.
எம்.ஜி.ஆர்.அ.தி.மு.க.வின் திருநாவுக்கரசு கூறும்போது பா.ம.க. மந்திரிகள் விலகலை பிரதமர் ஏற்றுக் கொண்டாரா என்பதை அறிந்த பின் தான்கருத்துச் சொல்ல முடியும் என்றார்.
இதே கருத்தையே இந்திய கம்னியூனிஸ்ட் கட்சியின் ஆர்.நல்லகண்ணுவும் தெரிவித்தார்.
ராமதாஸ் விலகிய சூழ்நிலை அறியாமல் கருத்து சொல்ல முடியாது என்று மக்கள் தமிழ் தேசம் கட்சியின் கண்ணப்பன் தெரிவித்தார்.
தான் புதுவையில் தெரிவித்தது போல் பா.ம.க, தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து வெளியேறி உள்ளது. இதனால் அக்கூட்டணியில் பாதிப்பு ஏற்படும் எனபுதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் தெரிவித்தார்.