இலங்கையிலிருந்து தேயிலை

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

இலங்கையிலிருந்து, பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட குஜராத் மக்களுக்கு தேயிலை, துணி வகைகள் மற்றும் ஒரு விமானம் முழுவதும் நிவாரணப்பொருட்களும் குஜராத்துக்குச் செல்லவுள்ளன.

இதுகுறித்து இலங்கை அரசு உயர் அதிகாரிகள் கூறுகையில், இந்திய தூதர் கோபால கிருஷ்ண காந்தியிடம், குஜராத்துக்குத் தேவையான நிவாரணப்பொருட்களைக் கொடுக்குமாறு அதிபர் சந்திரிகா குமாரதுங்கா கூறியுள்ளார். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

குஜராத்தில் வாழும் மக்கள் கடும் குளிரால் நடுங்குகின்றனர். அவர்களின் அத்தியாவசியத் தேவை தற்போது துணிமணிகள். இதனால் துணி வகைகளும்,தேயிலையும் அனுப்பி வைக்க முடிவு செய்துள்ளோம்.

எவ்வுளவு தேயிலை மற்றும் துணி வகைகள் அனுப்பி வைக்கப்படும் என்று இதுவரை கணக்கிடப்படவில்லை. இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம்நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்படும். அந்த விமானத்தில் பயணிகள் யாரும் இருக்க மாட்டார்கள்.

வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கான முக்கிய குழுவான முதலீட்டார்கள் குழுவினர், ஜவுளித் தொழிற்சாலைகளில் தயாரிக்கப்பட்ட துணி வகைகளை குஜராத்மக்களுக்காகக் கொடுக்கிறார்கள். இலங்கையில் வாழும் இந்தியர்களிடமிருந்து பணம், துணிமணிகள் மற்றும் நிவாரணப் பொருட்களை வாங்கத்தீர்மானித்துள்ளோம் என்றார்.

குஜராத் இந்து மண்டலத்தின் தற்காலிகத் தலைவர், மிருதுளா அமலின் கூறுகையில், குஜராத்தில் வாழும் மக்களுக்காக சனிக்கிழமை பிரார்த்தனைநடத்தத் திட்டமிட்டுள்ளோம். இந்தப் பிரார்த்தனையின் போது, குஜராத் பூகம்பத்தில் உயிரிழந்தவர்களுக்காக 2 நிமிட மெளன அஞ்சலி செலுத்துவோம்.இதில் குஜராத் மண்டல பிரதிநிதிகள் கலந்து கொண்டு பேசுவார்கள்.

குஜராத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக உதவி செய்யுமாறு இந்திய தூதரகம் மற்றும் இலங்கை - இந்திய நண்பர்கள் சங்கத்தின் சார்பில்,பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்படும்.

பலர் எங்களிடம், குஜராத்துக்கு பூகம்ப நிவாரண உதவி செய்வதாக உறுதி அளித்துள்ளனர். அவர்களிடமிருந்து நிதி மற்றும் நிவாரண உதவிகள்வசூலிக்கப்படும். இலங்கையில் வாழும் 75 குஜராத்தி குடும்பங்களும், பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வதாக அறிவித்துள்ளனர்.

குஜராத்தில் வாழும் பெரும்பாலானவர்கள், எங்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆவர். அவர்களுக்கு உதவ நாங்கள் காத்திருக்கிறோம்.இலங்கையில் வாழும் குஜராத்தியர்கள் தவிர, இங்கு வாழும் போஹ்ரா மக்கள், சிந்தி மக்கள், மேமன் மக்கள், தெலுங்கு மற்றும்மலையாளிகளும் இந்தியத் தூதரகத்தைத் தொடர்பு கொண்டு நிவாரண உதவிகள் செய்வதாகத் தெரிவித்துள்ளனர் என்றார்.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+