For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விளையாட முடியலியே .. வருத்தப்படுகிறார் கும்ப்ளே

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் விளையாட முடியாததுவருத்தமளிக்கிறது என இந்தியாவின் சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்ப்ளேகூறியுள்ளார்.

சென்னை ஐ.ஐ.டி. செம்ப்ளாஸ்ட் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவிளையாட முதல் கட்டமாக தேர்வு செய்யப்பட்டுள்ள 25 கிரிக்கெட் வீரர்கள்பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இவர்களிலிருந்து டெஸ்ட் மற்றும் 1 நாள் போட்டிக்குவிளையாடும் 12 வீரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

பயிற்சி மைதானத்தில் கும்ப்ளே நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

300 விக்கெட்டுகள் என்ற இலக்கை எட்ட இன்னும் சிறிது நாட்கள் காத்திருக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்திய மண்ணில் ஆஸ்திரேஸியாவிற்கு எதிராகவிளையாட முடியாதது வருத்தமளிக்கிறது.

நான் விளையாடததால் இந்திய அணிக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படாது.சரண்ஜித் சிங், ஹர்பஜன் சிங், முரளி கார்த்திக் போன்ற சிறப்பாக விளையாடக் கூடியஇளைஞர்கள் இருக்கிறார்கள்.

இப்போது விளையாட முடியாதது வருத்தமளித்தாலும், 4 மாதங்களுக்கு பின்விளையாட முடியும் என்பது மகிழ்ச்சியளிக்கிறது.

இந்திய அணி அதிக ரன்கள் எடுத்தால் ஆஸ்திரேலியர்களை வெல்வது எளிது எனகூறினார்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X