கனடா குழுவுக்குத் தடை
டோரான்டோ:
கனடா நாட்டு மீட்புக் குழுவுக்கு சர்வதேச அளவிலான தரம் இல்லாத காரணத்தால் அவர்களை இந்தியாவுக்கு அனுப்ப முடியாது என்று கனடா சர்வதேசவளர்ச்சித்துறை அமைச்சர் மரியா மினா கூறி விட்டார்.
கனடா நாடாளுமன்ற எதிர்கட்சி உறுப்பினரும், இந்திய- கனட கூட்டணி உறுப்பினருமான தீபக் ஒபேராய், கனடாவிலிருந்து, பூகம்பத்தால்பாதிக்கப்பட்ட மக்களுக்ளை மீட்பதற்கு மீட்புக்குழு அனுப்பப்படவில்லை. இதற்கு சர்வதேச வளர்ச்சித்துறை அமைச்சர் மரியா மினா பதிலளிக்க வேண்டும்என்று குற்றம்சாட்டினார்.
இதையடுத்து மரியா மினா கூறுகையில், கனடாவிலிருந்து மீட்புக் குழுவை இந்தியாவுக்கு அனுப்பத் தயார். ஆனால் கனடா மீட்புக்குழுவில் சர்வதேச தரம்இல்லை. அதனால் அவர்களை என்னால் குஜராத்துக்கு அனுப்ப முடியாது.
ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்கு மீட்புக்குழு அனுப்ப சர்வதேச அனுமதி, ஐ.நா. அனுமதி ஆகியவற்றை சம்பந்தப்பட்ட நாடு பெற்றிருக்க வேண்டும்.சர்வதேச அளவிலான தரம் இல்லாத காரணத்தால் கனடா மீட்புக் குழுவினருக்கு அனுமதி கிடைக்கவில்லை. இதனால் கனடா மீட்புக் குழுவைஇந்தியாவுக்கு அனுப்ப முடியாது.
கனடாவிலுள்ள இந்திய தூதரக அதிகாரி பீட்டர் சுதர்லான்ட் மற்றும் இந்தியாவிலுள்ள கனடா தூதரக அதிகாரி ரஜினிகாந்தா வர்மா ஆகியோரிடம்பூகம்பம் குறித்தும், அதற்கான நிவாரணப் பணிகள் நடைபெற்று வருவது குறித்தும் அவ்வப்போது அறிந்து கொள்கிறேன். இருப்பினும் கனடா சர்வதேசவளர்ச்சி நிறுவன ஊழியர்கள், குஜராத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிதி வசூல் மற்றும் நிவாரணப் பொருட்கள் வசூல் செய்துகொடுத்து வருகிறார்கள்.
மீட்புக் குழுவினர் தவிர குஜராத்துக்குத் தேவையான கூடாரங்கள் அமைப்பதற்கான பொருட்கள், மருந்துப் பொருட்கள், உணவுப் பொருட்கள், துணிவகைகள், குடிநீர் ஆகியவற்றை கனடா செஞ்சிலுவைச் சங்கம் மூலம் அனுப்பி வைத்துள்ளோம்.
கனடாவிலிருந்து ஏற்கனவே 5 மில்லியன் டாலர்கள் குஜராத் நிவாரண நிதியாக அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்குத் தேவைப்படும் அளவுக்கு கனடாஇன்னும் நிதியுதவியை அதிகரிக்கும்.
ஐ.ஏ.என்.எஸ்.