வங்கதேசம் .. தீவிரவாதிகள், ராணுவ மோதலில் 8 பேர் பலி
டாக்கா:
வங்கதேசத்தில் முஸ்லீம் தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையேதுப்பாக்கி சண்டையில் 8 பேர் கொல்லப்பட்டனர். 100-க்கும் அதிகமானவர்கள்காயமடைந்தனர்.
வங்கதேச எதிர்க்கட்சியான இஸ்லாமிக் ஓகியா ஜோட் அமைப்பின் தலைவர்கள்சிலரை, போலீஸ் கான்ஸ்டபிளை கொன்றதாக போலீசார் கைது செய்தனர்.இதையடுத்து தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படை வீரர்களுக்கும் இடையேசண்டை மூண்டது.
தலைவர்கள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அதை எதிர்த்து எதிர்க்கட்சியின்பொதுச் செயலாளர் பஜ்லுல் அமினியின் சொந்த ஊரான ப்ராமான்பாரியில் பொதுவேலை நிறுத்ததிற்கு தீவீரவாதிகள் அழைப்பு விடுத்திருந்தனர். கைது செய்யப்பட்டதலைவர்களை விடுதலை செய்யவேண்டும் என அவர்கள் கோரினர்.
வங்கதேச உள்துறை அமைச்சர் முகமது நசீம் கூறுகையில், இந்த சண்டையில் இரண்டுபேர் மட்டுமே கொல்லப்பட்டுள்ளனர். தீவிரவாதிகள் ஒரு போலீசாரின் கையையும்வெட்டினர், வங்கதேச ரைபிள்ஸ் படையைச் சேர்ந்த ஒரு மேஜரும் பலத்தகாயமடைந்துள்ளார் என கூறினார்.
சண்டை குறித்து போலீசாரும், வங்கதேச ரைபிள்ஸ் படை அதிகாரிகளும் கூறுகையில்,மோதலில் 14 பேர் படுகாயமடைந்து மோசமான நிலையில் இருக்கிறார்கள்.காயமடைந்தவர்களில் டாக்காவைச் சேர்ந்த 9 பத்திரிக்கையாளர்களும் அடங்குவர்என கூறினர்.
ஐ.ஏ.என்.எஸ்.