ஈரானின் ஈர உணர்வு
Subscribe to Oneindia Tamil
மும்பை:
குஜராத்தில் பூகம்பம் ஏற்பட்டதால், பிப்ரவரி 9 ம் தேதி கொண்டாடப்படுவதாக அறிவித்திருந்த தங்களது தேசிய தினத்தைக் கொண்டாடுவதில்லை என்றுஈரான் தூதரகம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மும்பையில் உள்ள ஈரான் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், குஜராத்தில் ஜனவரி 26 ம் தேதி ஏற்பட்ட பூகம்பத்தையடுத்து பலர்உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். ஏராளமான மக்கள் வீடுகளையும், உடைமைகளையும், உறவினர்களையும் இழந்து நிற்கின்றனர்.
இந்த நேரத்தில் நாங்கள் பிப்ரவரி 9 ம் தேதி கொண்டாடவிருந்த தேசிய தினத்தைக் கொண்டாட வேண்டாம் என்று தீர்மானித்துள்ளோம் என்றுகூறப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications