வீரப்பன் வேட்டை: ஒரே மர்மமாக உள்ளது .. நாயனார்
திருவனந்தபுரம்:
வீரப்பன் பிடிபடாமல் இருப்பதில் மர்மம் இருப்பதாக கேரள முதல்வர் நாயனார் தெரிவித்தார்.
வீரப்பன் கேரளாவிற்குள் நுழைந்தால் 24 மணிநேரத்தில் பிடித்துவிடுவோம் என்று முன்பு நாயனார் கூறியிருந்தார்.
இந்நிலையில், கேரளக் காட்டில் வீரப்பன் கும்பல் மீது அதிரடிப்படை தாக்குதல நடத்தியது பற்றி நாயனாரிடம் கேட்டதற்கு, தற்போது வீரப்பன்கேரளாவில்தான் இருக்கிறான் என்று உறுதியாக கூற முடியாது, என்றார்.
கார்கில் போரில் பாகிஸ்தானை வெல்லும் இந்தியாவால், எட்டு ஆண்டுகளாக தேடப்பட்டு வரும் வீரப்பனை பிடிக்க முடியவில்லை என்று கூறுவது,மர்மமாக இருக்கிறது.
வீரப்பன் தலைக்கு 40 லட்ச ரூபாய் அறிவித்துள்ள மத்திய அரசு தான் வீரப்பன் பிடிபடுவது எப்போது என்று தெரிவிக்க வேண்டும் என்று திருவனந்தபுரத்தில்,அமைச்சரவை கூட்டத்திற்குப்பின் நிருபர்களிடம் பேசிய, நாயனார் தெரிவித்தார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications