உதவுங்கள் ..புஷ்ஷிடம் கோரிக்கை
வாஷிங்டன்:
குஜராத் மாநிலத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீண்ட கால உதவி கிடைக்கும் வகையிலும்,குஜராத்திலிருந்து வேறு இடங்களுக்குச் செல்ல விரும்புபவர்களுக்கு உதவவும் அமெரிக்கா உதவி செய்யவேண்டும் என்று அமெரிக்க செனட் உறுப்பினர்கள் 12 பேர் அதிபர் ஜார்ஜ் ஜூனியர் புஷ்ஷிடம்வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை குழுத் தலைவர் ஜெசி ஹெல்ம் கூறுகையில், குஜராத்தில் பூகம்பத்தால்பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமெரிக்கா பெரிய அளவில் உதவி செய்ய வேண்டும்.
மனிதநேய உதவியைத் தவிர அமெரிக்கா, தொழில் நுட்ப முறையிலும், நீண்ட கால உதவியையும் பூகம்பத்தால்பாதிக்கப்பட்ட குஜராத் மாநிலத்திற்கு அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
கடந்த வாரம் அமெரிக்க செனட்டில் குஜராத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, அமெரிக்காவிலிருந்துநீண்ட கால உதவி அளிக்க வேண்டும் என்று தீர்மானம் எடுக்கப்பட்டது.
தற்போது 12 செனட் உறுப்பினர்கள், குஜராத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட தவிக்கும் மக்களுக்கு அமெரிக்காஉதவி அளிக்க வேண்டும் என்று அதிபர் ஜூனியர் புஷ்ஷிடம் வலியுறுத்தியுள்ளனர்.
யு.என்.ஐ.