வீரப்பனின் கூட்டாளிகள் .. புதிய தகவல்கள்
கோவை:
![]() ![]() ![]() |
| ஆலப்பாக்கம் முருகேசன் சந்திரன்கோ.ரமேஷ் |
வீரப்பன் மற்றும் அவனது கூட்டாளிகள் குறித்த தகவல்கள் கிடைக்காததால், அதிரடிப்படையினர் தேடுதல்வேட்டையில் தொய்வு ஏற்பட்டது. மேலும், அதிரடிப்படையினரும் சோர்வடைந்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு வீரப்பன் கூட்டாளிகளுடன் நடந்த சண்டையில் சில பொருட்கள்கைப்பற்றப்பட்டன. இதில் டிஜிட்டல் காமிராவும் ஒன்றாகும். இந்தக் காமிராவிலிருந்து பல படங்களைப் போலீசார்கைப்பற்றியுள்ளனர். இதில் வீரப்பனின் புதியக் கூட்டாளிகள் குறித்த தகவல்கள் கிடைத்துள்ளன.
இது குறித்து கோவை சரக டி.ஐ.ஜி, ராஜேந்திரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
தமிழக மற்றும் கேரள எல்லைப் பகுதியில் வீரப்பனைத் தேடும் பணி நடந்து வருகிறது. இந்தப் பணியில் கர்நாடகமற்றும் தமிழக, கேரளப் போலீசார் உட்பட 10 ஆயிரம் பேர் ஈடுபட்டுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்புவீரப்பன் கூட்டாளிகளுடன் செம்மந்திமலையில் நடந்த சண்டையில் அவர்கள் போட்டு விட்டுச் சென்றபொருள்களில் காமிரா ஒன்றும் கிடைத்துள்ளது.
இந்தக் காமிராவில் இருந்த படங்களில் பல முக்கியத் தகவல்கள் கிடைத்துள்ளன. மேலும் இதில் அவனதுகூட்டாளிகள் யார்,யார் என்பதும் தெரிய வந்துள்ளது.
இதில் ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த முருகேசன், நெல்லிக்குப்பம் கோ.ரமேஷ், சிக்கரசம்பாளையம் சந்திரன்,ஆகியோரது படங்கள் கிடைத்துள்ளன.
இவர்கள் 3 பேரும் வீரப்பனுக்கு நெருங்கியக் கூட்டாளிகளாச் செயல்பட்டு வந்துள்ளனர். இதில் நெல்லிக்குப்பம்கோ.ரமேஷ் மற்றும் ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த முருகேசன் ஆகியோர் தமிழ்த் தீவிரவாத அமைப்பைச்சேர்ந்தவர்கள் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
மேலும், இவர்கள் குறித்த தகவல்களை கொடுப்பவர்களுக்கு தகவலைப் பொறுத்து உரிய சன்மானம்வழங்கப்படும். தகவல் அளிப்பவர்களின் பெயர் மிகவும் ரகசியாகப் பாதுகாக்கப்படும் என்றார்.















Click it and Unblock the Notifications