For Daily Alerts
Just In
முதல்வரை பதவி விலகக் கோருகிறது பாண்டி. பா.ஜ.க.
பாண்டிச்சேரி:
3 த.மா.கா. சட்டமன்ற உறுப்பினர்களின் பதவி நீக்கம் செல்லாது என சென்னைஉயர்நீதி மன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து முதல்வர் ப.சண்முகம் பதவி விலகவேண்டும் என பாண்டிச்சேரி பாரதிய ஜனதா கட்சி கேட்டுக் கொண்டுளளது.
நிருபர்களுக்கு பேட்டியளித்த பாண்டி பா.ஜ.க. தலைவர் கிருஷ்ணமூர்த்திகூறியதாவது.:
பாண்டிச்சேரி எம்.எல்.ஏ.க்களை பதவி நீக்கம் செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருப்பது பாண்டிச்சேரி அரசுக்கு வழங்கப்பட்டகண்டனமாகும்.
இதற்கு பொறுப்பேற்று பாண்டி முதல்வர் உட்பட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்அனைவரும் பதவி விலக வேண்டும் என கூறினார்.
யு.என்.ஐ.
Story first published: Friday, February 9, 2001, 5:30 [IST]