For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மூங்கிலில் வீடுகள்

By Staff
Google Oneindia Tamil News

கொச்சி:

குஜராத் மாநிலத்தில் குறைந்த விலையில் பூகம்பத்தால் பாதிக்கப்படாத வீடுகள் கட்டிக் கொடுப்பதாக கேரள மாநிலமூங்கில் கழக தலைவர் ஏ.பி.குரியன் வியாழக்கிழமை தெரிவித்தார்.

இதுகுறித்துக் கொச்சியில் நிருபர்களிடம் அவர் கூறுகையில், ரூ. 25, 000 என்ற மதிப்பில் ஒரு வீடு கட்டப்படும்.இதற்காக கொச்சியிலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அங்கமாலி மூங்கில் தொழிற்சாலையிலிருந்துதரமான மூங்கில்கள் குஜராத்துக்கு அனுப்பப்படும்.

இதற்காக குஜராத் மாநில அகமதாபாத் மாவட்டக் கலெக்டரிடம் பேசி வருகிறோம். இதற்காக கேரள மூங்கில் கழகஎன்ஜினியர் ஒருவர் விரைவில் அகமதாபாத் சென்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளைச் சந்தித்துப் பேசுவார்.

கேரள மாநில மூங்கில் கழகம், ரூ 6 லட்சம் பெறுமானமுள்ள மூங்கில் பலகைகளை குஜராத்தில் பூகம்பத்தால்பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுப்பதற்காக கொடுத்துள்ளது.

கேரள மாநில தொழில்துறை அமைச்சர் சுசீலா கோபாலன், கொச்சியிலிருந்து அகமதாபாத்துக்குச் செல்லும்நிவாரணப் பொருட்களை எடுத்துக் கொண்டு செல்லும் லாரியை கொடியசைத்து அனுப்பி வைப்பார் என்றார்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X