For Quick Alerts
For Daily Alerts
Just In
கம்பளி தருகிறது லிபியா
மும்பை:
ஜனவரி 26 ம் தேதி ஏற்பட்ட பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட குஜராத் மக்களுக்காக நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைப்பதாக லிபிய அதிபர்கடாஃபி வியாழக்கிழமை தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், குஜராத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கம்பளிகள், துணி வகைகள், உணவுப் பொட்டலங்கள் ஆகியவைலிபியாவிலிருந்து அனுப்பி வைக்கப்படும் என்றார்.
முன்னதாக, லிபிய அதிபர் கடாஃபி, ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன், பிரதமர் வாஜ்பாய், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங் ஆகியோருக்கு குஜராத்பூகம்பம் குறித்து லிபியா ஆழ்ந்த வருத்தம் தெரிவிப்பதாக செய்தியும் அனுப்பியுள்ளார்.
யு.என்.ஐ.
Comments
Story first published: Thursday, February 8, 2001, 5:30 [IST]