மனித உரிமையை மீறுகிறது எஸ்.டி.எப் .. நெடுமாறன்
சென்னை:
வீரப்பனை பிடிக்க அனுப்பிய அதிரடிப்படை மனித உரிமை மீறல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன்குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னையில் பகுத்தறிவுவாதி பெரியாரும் அவரின் சீடர்களும் என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா நடந்தது. அதில் பேசிய நெடுமாறன்,
அதிரடிப்படையினர் அத்துமீறி கேரளப்பகுதிக்குள் நுழைந்தது மட்டுமல்லாமல் அங்குள்ள போலீஸ் கண்காணிப்பாளரையும் மிரட்டியுள்ளனர்.
சென்ற முறை வீரப்பனை பிடிக்க அனுப்பப்பட்ட அதிரடிப்படை ஆதிவாசிகளை கொல்வது, பெண்களின் கற்பை சூறையாடுவது போன்ற பல்வேறு மனிதஉரிமை மீறல்களை செய்தது.
அவர்களின் நடவடிக்கையால் 300 குடும்பங்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டன. இது பற்றி விசாரித்த சதாசிவம் கமிட்டி அறிக்கையை செயல்படுத்தவிடாமல் அதிரடிப்படையினர் தடையாணை பெற்றுள்ளனர்.
அதிரடிப்படையின் தவறுகளை சுட்டிகாட்டும் தன்னை தேசவிரோதி என முத்திரை குத்துகின்றனர்.
வீரப்பனை பிடிக்க அரசு விரும்பினால் அப்பாவி மக்களை விட்டுவிட்டு வீரப்பனை மட்டுமே பிடிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் பெரியார் மற்றும் விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் ஆகியோர் குறித்த சி.டி.க்களை நெடுமாறன் வெளியிட்டார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications