For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆர்க்காடு வீராசாமிக்கும் வந்தது சிக்கல்!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தேர்தல் குழப்பம் தமிழக அமைச்சர் ஆற்காடு வீராசாமிக்கும் சிக்கலைக்கொடுத்துள்ளது.

சமீபத்தில் முடிவடைந்த சட்டசபை கூட்டத் தொடரின்போது அ.தி.மு.க எம்.எல்.ஏ.சுந்தரம், முதல்வர் கருணாநிதி மற்றும் மத்திய வர்த்தக அமைச்சர் முரசொலி மாறனின்போலி வாக்காளர் அட்டை என்று கூறி இரண்டு அட்டைகளைக் காட்டிபரபரப்பேற்படுத்தினார்.

அந்தக் குழப்பம் தீரும் முன் தற்போது தமிழக சுகாதார மற்றும் மின்சாரத் துறைஅமைச்சர் ஆற்காடு வீராசாமிக்கு புதிய சிக்கல் வந்துள்ளது.

தனக்கு வந்த குழப்பம் குறித்து வீராசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்கூறியிருப்பதாவது:

சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி, நான் அண்ணாநகரிலிருந்து என் வீட்டை மத்தியசென்னைக்கு மாற்றிக் கொண்டுள்ளதால், என் பெயரையும், என் குடும்பத்தார்பெயரையும் ஏன் அண்ணா நகர் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கக்கூடாது எனகேட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.

இதைக் கண்டு நான் அதிர்ச்சி அடைந்தேன். ஏனென்றால் கடந்த 20 ஆண்டுகளாகஅண்ணாநகரில் வசித்து வருகிறேன். நான்கு தேர்தல்களில் அண்ணா நகர்தொகுதியிலிருந்து போட்டியிட்டிருக்கிறேன். வாக்காளர் பட்டியலில் என் பெயரும்,வாக்காளர் எண்ணும் இடம் பெற்றிருந்தது.

மாவட்ட தேர்தல் அதிகாரியிடமும், தலைமை தேர்தல் அதிகாரியிடமும் இது குறித்துதெரிவித்ததும் அவர்கள் தவறு நடந்ததற்கு வருத்தம் தெரிவித்தனர்.

அண்ணாநகர் தொகுதியிலிருந்து 96,000 பேரின் பெயர்கள் வாக்காளர்பட்டியலிலிருந்து நீக்கப்பட்டதும் இது போன்ற தவறுகளால் நடந்திருக்கலாம் எனநினைக்கிறேன்.

எனவே தி.மு.க தொண்டர்கள் அனைவரும் தங்கள் பெயரும், தங்கள் குடும்பத்தார்பெயரும் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருக்கிறதா என்பதை உறுதி செய்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X