நெல்லையில் ஒரு எய்ட்ஸ் கூத்து
Subscribe to Oneindia Tamil
திருநெல்வேலி:
திருநெல்வேலியில் எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரச்சார பெண் மீது விபசார வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், குற்றாலம் அருகே நன்னகரம் பகுதி எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கு வந்த பெண்ணும், டாக்டரும் பிரச்சாரநிகழ்ச்சிக்குப்பின் குற்றாலம் லாட்ஜ் ஒன்றில் "சந்தோஷமாக இருந்திருக்கின்றனர்.
இதுபற்றி கிராமத்தினர் அளித்த தகவலை வைத்து போலீசார் அவர்களை பிடித்ததுடன் அப்பெண்ணின் மீது விபச்சாரம் செய்ததாக வழக்கு பதிவு செய்தனர்.
டாக்டர் மீதும் நடவடிக்கை கோரிய கிராமத்தினரிடம் அப்பெண் டாக்டர் மீது கற்பழிப்பு புகார் கொடுத்தால் உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார்தெரிவித்தனர்.
எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரச்சாரப் பணியில் ஈடுபடும் பெண்கள் மீது பல விபச்சார வழக்குகள் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications