For Daily Alerts
Just In
2001 சென்சஸ் .. 23 கேள்விகள்
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில், 2-வது கட்ட சென்சஸ் கணக்கெடுப்புப் பணி வெள்ளிக்கிழமை துவங்கியது.
இதுகுறித்து சென்சஸ் துறை இயக்குநர் ஹேமச்சந்திரன் கூறுகையில், பிப்ரவரி 28-ம் தேதி வரை இது நடைபெறும்.அதன் பிறகு மார்ச் 1 முதல் 5ம் தேதி வரை திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
வீடுகளைப் பட்டியலிடும் முதல் கட்டப் பணி முன்பே முடிந்து விட்டது. தற்போது அடுத்த கட்டப் பணிகள்நடைபெறவுள்ளன. சமூக-கலாசாரம் தொடர்பான மொத்தம் 23 கேள்விகள் கேட்கப்படும். முழுப் பணிகளும்கம்ப்யூட்டர்மயாக்கப்பட்டுள்ளது. அனைத்து விவரங்களும் ரகசியமாக வைக்கப்படும்.
சென்சஸ் பணிக்காக பாண்டிச்சேரி முழுவதும் 4 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. கணக்கெடுப்புப் பணியில்மொத்தம் 1483 ஊழியர்கள் இடம் பெறவுள்ளனர் என்றார்.
யு.என்.ஐ.
Comments
Story first published: Friday, February 9, 2001, 5:30 [IST]