For Daily Alerts
Just In
போலி ஆவணங்கள் .. இலங்கை நபர், மகள் கைது
திருச்சி:
போலியான ஆவணங்கள் மூலம் இந்திய பாஸ்போர்ட்டுகளைப் பெற முயன்ற இலங்கையைச் சேர்ந்த நபரையும்அவரது மகளையும் திருச்சியில் போலீஸார் கைது செய்தனர்.
இலங்கையைச் சேர்ந்தவர் பால விநாயகம் (65). இவரது மகள் நிர்மலா (29). பால விநாயகம், 7 ஆண்டுகளுக்குமுன்பாக பால விநாயகம் தமிழகத்திற்கு அகதியாக வந்தார். தனது மகள் நிர்மலாவுக்கு பாஸ்போர்ட் கோரி அவர்திருச்சி பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். இதற்காக போலியான ஆவணங்களையும் அவர்தாக்கல் செய்திருந்ததாகத் தெரிகிறது.
போலீஸ் விசாரணயில் பாலவிநாயகம் கூறியிருந்த தகவல்கள் பொய்யானவை என்பது தெரிய வந்தது.இதையடுத்து அவரும், நிர்மலாவும் கைது செய்யப்பட்டனர்.
யு.என்.ஐ.
Story first published: Friday, February 9, 2001, 5:30 [IST]