For Quick Alerts
For Daily Alerts
Just In
"சக்தி பெற வேண்டும் பெண்கள்
பாண்டிச்சேரி:
பெண்களுக்கு அதிகாரமளிக்கும் இந்த ஆண்டில் பெண்கள் முன்னேற்றத்திற்காக பலநடவடிக்கைகள் எடுக்கப்படும் என பாண்டிச்சேரி ஆளுநர் ரஜினி ராய்தெரிவித்துள்ளார்.
ஆளுநர் மாளிகையான ராஜ் நிவாசில் புதுச்சேரிபெண்கள் கழகத்தால் பெண்கள் சுயதொழில் தொடங்க உதவும் விதமாக பெண்களுக்கு காஸ் ஸ்டவ் மற்றும் பலஉபகரணங்களையும் வழங்கி பேசுகையில் அவர் இந்த கருத்தை தெரிவித்தார்.
புதுச்சேரி பெண்கள் கழக தலைவர் சாய் குமாரி கூறுகையில், புதுச்சேரி பெண்கள்கழகம் 500 பெண்களுக்கு காஸ் ஸடவ் மற்றும் உபகரணங்களை கடனாகவழங்கியுள்ளது என கூறினார்.
யு.என்.ஐ.
Comments
Story first published: Friday, February 9, 2001, 5:30 [IST]