வீரப்பனுடன் தொடர்பில்லை .. தமிழ்த் தீவிரவாதிகள்
சென்னை:
எங்களுக்கு சந்தனக் கடத்தல் வீரப்பனிடமோ அல்லது விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனுடனோ எவ்விதத் தொடர்பும் இல்லை என்று தமிழர்விடுதலை இயக்கத்தினர் வியாழக்கிழமை தெரிவித்தனர்.
இதுதொடர்பாக தமிழர் விடுதலை இயக்கத்தின் அமைப்பாளர் இளவரசன், துணை அமைப்பாளர் கலை, செயலாளர் ஸ்டாலின், பொருளாளர் தமிழன் ஆகியோர்நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
பிற மொழி ஆதிக்கத்திலிருந்து தமிழ் மொழியைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில்தான் ஆயுதங்கள் ஏந்திப் போராடினோம். மக்களோபோராட்டத்திற்கு ஆதரவு தரவில்லை. போலீஸாரோ ஜனநாயக முறையில் எங்களைப் போராட அனுமதிக்கவில்லை.
சாதி ரீதியாகவும், மத ரீதியாகவும் பிரிந்து கிடக்கும் தமிழ் இனத்தை ஒன்று சேர்ப்பதே எங்களது குறிக்கோள். தமிழ் மக்களுக்காகவும், தமிழ்மொழிக்காகவும் போராடுவோம்.
லெனினியச் சித்தாந்தம், பொதுவுடைமை தத்துவத்தின் அடிப்படையில் எங்களது செயல்பாடுகள் இருக்கும். அழிவுப்பாதையிலிருந்து மக்களைக்காப்பாற்றுவோம் என்றனர்.
முன்னதாக, தமிழர் விடுதலை இயக்கத் தலைவர் இளவரசன் கூறுகையில், திராவிடர் கழகத்தைப் போன்று நாங்களும் தேர்தலில் போட்டியிட மாட்டோம்.எந்தக் கட்சியை ஆதரிக்க வேண்டும் என்று முடிவெடுக்கவில்லை. எங்கள் இயக்கத்தில் 10 லட்சம் பேர் உள்ளனர். அவர்கள் அனைவரும் தேர்தலைப்புறக்கணிப்பார்கள் என்றார் இளவரசன்.












Click it and Unblock the Notifications