திராவிட மதம் தெரியுமா?
கடலூர்:
மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலரிடம் தன் மதத்தை திராவிட மதம் என கடலூர்தி.மு.க. எல்.ஏ. கூறியுள்ளார்.
மக்கள் தொகை -2001 வெள்ளிக்கிழமை முதல் துவங்கியது. கடலூர் மக்கள் தொகைகணக்கெடுப்பு அலுவலர் ஒருவர் கடலூர் தி.மு.க.எம்.எல்.ஏ. இள. புகழேந்தி வீட்டிற்குமக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கச் சென்றார்.
அப்போது அவர் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், அவருடைய மதம் எது என கேட்டபோது திராவிட மதம் என கூறினார்.
தமிழகத்தில் ஆங்கிலேயர் வருவதற்கு முன் சைவம் மற்றும் வைணவம் என்ற இருமதங்கள் மட்டுமே இருந்தன. நான் இந்த இரண்டு மதங்களையும் சாராததால் நான்திராவிட மதத்தைச் சேர்ந்தவன் என அவர் விளக்கமும் அளித்துள்ளார்.
மக்கள் தொகை கணக்கெடுப்பு குடும்ப அட்டவணையில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்,சீக்கியர், புத்த, சமணர் போன்ற மத்ததிற்கு மட்டும் குறியீடு எண் உண்டு. மற்ற மதங்கள்தனியாக எழுதப்பட வேண்டும் அவற்றிற்கு குறியீடு எண் கிடையாது என்பதுகுறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications