காட்பாடி இளைஞர் திருப்பதியில் கைது
திருப்பதி:
தமிழகத்தின் காட்பாடி நகரைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை, அவரது இரண்டரை வயது மகனை கழுத்தை நெரித்துக்கொன்றதற்காக திருப்பதி, திருச்சானூர் போலீஸார் கைது செய்துள்ளனர்.
காட்பாடி அருகேயுள்ள காசிகுட்டா என்ற பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ் (29). இவரது மனைவி சசிகலா.இவர்களுக்கு சஞ்சய் காந்தி என்ற மகன் உள்ளான். பிரகாஷுக்கு கிருஷ்ணவேணி (27) என்ற பெண்ணுடன்தொடர்பு இருந்திருக்கிறது.
இதுதொடர்பாக சசிகலாவுக்கும், பிரகாஷுக்கும்இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்தடிசம்பர் மாதம் 30-ம் தேதி சசிகலாவுடன் கோபித்துக் கொண்டு, சஞ்சய் காந்தியுடன் கிருஷ்ண வேணி வீட்டுக்குசென்று விட்டார் பிரகாஷ். கிருஷ்ணவேணியின் வீடு ஆந்திர மாநிலம் திருப்பதி அருகேயுள்ள ராவுலுபல்லேகிராமத்தில் உள்ளது.
கிருஷ்ணவேணியோ, சஞ்சய் காந்தியை இடைஞ்சலாக நினைத்துள்ளார். இதையடுத்து தனது மகனைக் கொன்றுவிட தீர்மானித்தார் பிரகாஷ். எனவே, அன்று இரவு யாருக்கும் தெரியாமல் சஞ்சய் காந்தியை கழுத்தை நெரித்துக்கொன்றார். பின்னர் அந்தக் கிராமத்திலேயே புதைத்து விட்டார்.
சில நாட்கள் கழித்து பிரகாஷின் உறவினர்கள் அவரிடம் குழந்தை எங்கே என்று கேட்டுள்ளனர். அப்போது தனதுகுற்றத்தை பிரகாஷ் ஒத்துக் கொண்டார். ஆனால் அதற்குப் பிறகு தலைமறைவாகி விட்டார்.
இந்த நிலையில், தனது மகன் கொலை செய்யப்பட்டததை அறிந்த சசிகலா, பிப்ரவரி 5-ம் தேதி போலீஸில் புகார்கொடுத்தார். இதையடுத்து போலீஸார் தீவிரமாகத் தேடி பிரகாஷைக் கைது செய்தனர்.
யு.என்.ஐ.